Thursday, December 2, 2010

187. ஆண்கள் உலகம்!

பாடியவர்: அவ்வையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: நாட்டினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொறுத்தது என்ற கருத்தை இப்பாடலில் அவ்வையார் குறிப்பிடுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

நாடா கொன்றோ ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை ; வாழிய நிலனே.

அருஞ்சொற்பொருள்:
1.கொன்றோ - ஆக ஒன்றோ; அவல் = பள்ளம்; மிசை = மேடு

உரை: நிலமே! நீ நாடாகவோ, காடாகவோ, பள்ளமான இடமாகவோ அல்லது மேடான இடமாகவோ எப்படி இருந்தாலும், அங்கு வாழும் ஆண்கள் நல்லவர்களாக இருந்தால் நீயும் நல்ல நிலமாக இருப்பாய். நீ வாழ்க!

சிறப்புக் குறிப்பு: நாடு, காடு, அவல், மிசை என்பவை முறையே மருதம், முல்லை, நெய்தல், குறிஞ்சி நிலப்பகுதிகளைக் குறிக்கும். சங்காலத்தில் ஆண்களின் உழைப்பால் நிலம் செப்பனிடப்பட்டு வேளாண்மை நடைபெற்றது. ஆகவே, நிலத்தினது இயல்பு அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பொருத்ததாக இருந்தது. பாடுபட்டு உழைப்பவர்கள் இருந்தால் எல்லா நிலப்பகுதிகளுமே பயனளிப்பதாக இருக்கும். ஆகவே, இப்பாடலில், ”ஆடவர்” என்பதை “மக்கள்” என்றும் “நல்லவர்” என்பதை ”கடமை உணர்வோடு உழைப்பவர்” என்றும் பொதுவான முறையில் பெருள் கொள்வது சிறந்ததாகத் தோன்றுகிறது.

8 comments:

Unknown said...

Sir my name is sathiyamoorthi. Currently i am preparing for Indian Civil services examination. I had purananooru part in CSE main exam syllabus. Your is very helpful for my preparation sir. உங்களின் உரை மிகவும் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி.

Unknown said...

Sir my name is sathiyamoorthi. Currently i am preparing for Indian Civil services examination. I had purananooru part in CSE main exam syllabus. Your is very helpful for my preparation sir. உங்களின் உரை மிகவும் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி.

முனைவர். பிரபாகரன் said...

Dear Mr. Sathyamurthi,

Thank you for your comments. Wish you the best of luck in the Indian Civil Service Examination.

Best wishes,
Prabhakaran

MAGESH N said...

Sir, please guide me for tamil mains exam.

Unknown said...

This is Marimuthu.K THANK YOU SIR very use full

Rakshakan... said...

நன்றி...

Byraha said...

உங்களுடைய எழுத்து நடை சிறப்பாக உள்ளது.எளிதாக புரியும் வகையில் உள்ளது.

Ashraf, NVK said...

There is a verse in Dhammapada that is exactly like this