Tuesday, October 23, 2012

355. ஊரது நிலைமையும் இதுவே?


355. ஊரது நிலைமையும் இதுவே?

பாடியவர்: பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி: இப்பாடல் மிகவும் சிதைந்துள்ளதால் பொருள் விளங்கவில்லை.
திணை: காஞ்சி. பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.
துறை: மகட்பாற் காஞ்சி. ”நின் மகளைத் தருக” என்னும் தலைவனோடு மாறுபட்டு நிற்றல்.


மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே; மற்றே
எண்ணா மையலன் தந்தை தன்னையர்
கண்ணார் கண்ணிக் கடுமான் கிள்ளி                              5
. . . . . . . . . . . . .

அருஞ்சொற்பொருள்: 1. ஞாயில் = பகைவரை நோக்கி அம்பு எய்துவதற்காக மதில்களில் அமைக்கப்பட்ட துளைகள்; கிடங்கு = அகழி. 2. உகளுதல் = ஓடித் திரிதல் . 4. மையல் = மயக்கம்; தன்னையர் = தமையன்மார். 5. ஆர் = ஆத்தி; கடு= விரைவு.

உரை: இவ்வூர் மதிலில் ஞாயில்கள் இல்லை; அகழியில் நீரில்லை. ஆகவே, அகழிகளில் நீர் இல்லாததால் கன்றுகள் மேய்ந்து திரிகின்றன.  இந்த ஊரின் நிலையும் இதுதான். இவள் தந்தை தன்  பெண்ணின் திருமணத்தைப் பற்றி எண்ணிப் பாராமல் அறியாமை என்னும் மயக்கத்தில் உள்ளான்.  இவள் தமையன்மார் கண்ணுக்கினிய ஆத்திமாலையையும் விரைந்து ஓடும் குதிரைகளையும்டைய கிள்ளி ….

No comments: