Monday, April 18, 2011

244. வண்டு ஊதா; தொடியிற் பொலியா!

பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: தெரியவில்லை.
பாடலின் பின்னணி: இப்பாடலில் முதல் இரண்டு வரிகளும் மூன்றாவது வரியில் இரண்டு சொற்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கிடைத்துள்ள பகுதியை ஆய்ந்து பார்த்தால், யாரோ ஒரு புலவர், கையறு நிலையில் தாம் பெற்ற துயரத்தை வெளிப்படுத்துவது போல் தோன்றுகிறது.

திணை: தெரியவில்லை.
துறை: தெரியவில்லை.

பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா;
விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா;
இரவல் மாக்களும் .. .. .. .. .. .. .. .


அருஞ்சொற்பொருள்:
1. சென்னி = தலை. 2. தொடி = வலையல். பொலிவுல் = அழகு.

உரை: பாணர்களின் தலைகளில் உள்ள பூக்களிலிருந்து ஒழுகும் தேனைப் பருகுவதற்காக வண்டுகள் அங்கு சென்று ஒலிப்பது நின்றது. விறலியரின் முன்கைகளில் வளையல்கள் அழகு செய்யவில்லை. இரவலர்களும் …..

No comments: