Sunday, August 16, 2026

நற்றிணை

 

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

நான் தற்போது நற்றிணைப் பாடல்களுக்கு உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை முதல் 50 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளேன். தொடர்ந்து உரை எழுதி, முதல் 200 பாடல்களுக்கான உரையை ஒரு நூலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்.

என்னுடைய உரையில், பாடல், பாடலாசிரியர் பற்றிய குறிப்பு, பாடலின் துறை, துறைக்கான விளக்கம், கொண்டுகூற்று, உரை, சிறப்புக் குறிப்பு ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. பாடலின் சொற்பொருளையும் உள்ளார்ந்த பொருளையும் இயன்றவரை எளிமையாகவும் தெளிவாகவும் விளக்குவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

 

என்னுடைய உரைகளைப் படித்துத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு நற்றிணையில் ஆர்வமுள்ள நண்பர்களை அன்புடன் வேண்டுகிறேன். உங்கள் கருத்துகளும் திருத்தங்களும் இம்முயற்சியை மேலும் சிறப்பாக அமைக்க உதவும்.

நற்றிணை உரைகள்: https://nattrinai400.blogspot.com

அன்புடன்,

பிரபாகரன்